savarimuththu saimonpillai
ஆழ்ந்த அனுதாபங்கள்!!
நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், வவுனியா பெரிய தம்பனையை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு சவரிமுத்து சைமன்பிள்ளை அவர்கள் 30.04.2014 புதன்கிழமை மரணமெய்தினார் என்பதை புளொட் அமைப்பினராகிய நாம் மிகவும் துயருடன் அறியத் தருகின்றோம்.

சேவை மனப்பான்மையில் – மக்கள்
தேவை அறிந்து செயற்பட்ட
நல்லதோர் மனிதரை
நாமிழந்து நிற்கின்றோம்
வெள்ளை உள்ளம்-சிறு
பிள்ளைகுணம் கொண்ட இவர்-எம்
விடுதலைப் பயணத்தின்
விருட்சமாய் திகழ்ந்தவர்

எம் பயணத்தில்
திசையாயும் இருந்தார்
திசை காட்டியுமாய் இருந்தார்
இன்று-எம்மைவிட்டு போன செய்தி
இதயத்தையே நோக வைக்கிறது
அவரின் சேவை எண்ணி
ஆறாத்துயரோடு-நாம்
அஞ்சலித்து நிற்கின்றோம்

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், தோழர்கள், நண்பர்கள், உறவுகளுக்கு நாம் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE;)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

(நாளை 04.05.2014 காலை 10மணிக்கு பெரியதம்பனையில் இறுதிக்கிரியைகள் இடம்பெறும்.)