மரண அறிவித்தல்
கந்தசாமி சேதுராஜா
(அலுவலக உத்தியோகத்தர், குருமன்காடு காளி கோவில், வவுனியா)

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் 27/1 C , பட்டாணிச்சூர் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சேதுராஜா அவர்கள் 02.12.2013 திங்கட்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் தவமணி (வவுனியா சைவபிரகாசா மகளிர் கல்லூரி) அவர்களின் அன்பு கணவரும்,

மகேஸ்வரி, தனேஸ்வரி, ஆனந்தேஸ்வரி, நிர்மலா, லீலாவதி, நாகேஸ்வரி,ஆகியோரின் அன்பு சகோதரனும்,

தருமரத்தினம்(அனுராதபுரம்), செல்வமணி(லண்டன் )ஆகியோரின் மைத்துனரும்,

பகீரதன் (வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி) விஜிதா (வவுனியா தமிழ் மகா வித்தியாலயம்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04.12.2013 அன்று அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று தட்சனாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இத் தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளவும்…

தகவல்
மருமகன் பகீரதன்
(27/1 C பட்டாணிச்சூர் வவுனியா )