மலர்வு: 07.02.1932 உதிர்வு: 22.04.2015

விழிநீர் அஞ்சலிகள்
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முகத்தான்குளம், செட்டிகுளம், வவுனியாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சின்னப்பிள்ளை அவர்கள் 22.04.2015 புதன்கிழமை அதிகாலை 5மணியளவில் அன்னாரின் முகத்தான்குளம் இல்லத்தில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

உயர் சிந்தனை கொண்ட
உத்தம தோழன் ரத்தினவேல்,
தன்னினத்தின் மானம் காக்க
தன்னையே அழித்த (மதியெனும்)
தனையனைத் தந்த எம் தாயே1
சின்னப்பிள்ளை அம்மாவிற்கு…
தீராத் துயரோடு
செலுத்துகின்றோம் அஞ்சலியை….

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

குறிப்பு: அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக் கிரியைகள் நாளை பிற்பகல் 1 மணியளவில் செட்டிகுளம் இந்து மயானத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்புகட்கு 0245682516 0776149952 பாலன்

-PLOTE-

frames-design1d